Home இலங்கை சமாதானம் மிக்க சமூகத்தைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் – ஜனாதிபதி

சமாதானம் மிக்க சமூகத்தைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் – ஜனாதிபதி

by admin


பிரிவினைகள் மற்றும் சந்தேகங்களின்றி நம்பிக்கையுடன் அனைவரும் சமூகத்தில் வாழ்வதற்கான உரிமையை உறுதிசெய்வதனூடாகவே நாட்டில் பொருளாதார, சமூக மற்றும் இன அடிப்படையில் ஏற்படும் சகல பிரச்சினைகளுக்குமான தீர்வுகளைக் காணலாம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

வேற்றுமையை இல்லாதொழித்து அனைவரும் புரிந்துணர்வுடனும், நம்பிக்கையுடனும் செயற்படும் சமூகமொன்றினை எமது நாட்டில் கட்டியெழுப்புவதற்கு சகலரும் பிரிவினைகளின்றி ஒன்றுபடவேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இன்று (11)   மாத்தறை வெஹெரஹேன பூர்வாராம ரஜமகா விகாரையில் இடம்பெற்ற வண. கிரம விமலஜோதி தேர்ருக்கு தென்னிலங்கையின் பிரதான சங்கநாயக்கர் பதவிக்கான நியமனப் பத்திரிகையை வழங்கும்  நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன   மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More