Home இலங்கை சந்தருவன் சேனாதீர மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

சந்தருவன் சேனாதீர மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

by admin

லங்கா ஈ நியூஸ் இணையதளத்தின் ஆசிரியர் சந்தருவன் சேனாதீர மீதான வழக்கு விசாரணை   எதிர்வரும் பெப்ரவரி 20ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில்   சந்தருவன் சேனாதீரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

லங்கா ஈ நியூஸ் இணையதளத்தில் வெளியான செய்தி ஒன்றால் நீதிமன்றம் மற்றும் பெரும்பாலான நீதிபதிகளுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும்    எனவே, பிரதிவாதியை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தி உரிய தண்டனை வழங்க வேண்டும் எனவும்     கோட்டை மாநகர சபையின் முன்னாள் உப தலைவர் மதுர விதானகேவினால்   மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மேலும், இன்றைய விசாரணைகளின் போது, சந்தேகநபருக்கான கடிதம் ,  வெளிவிவகார அமைச்சு மற்றும் பிரித்தானிய, கனேடிய தூதரகங்களுடாக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் சார்பில் முன்னிலையான  சட்டத்தரணி   தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More