Home இலங்கை கண் சத்திரசிகிச்சையில் கிருமி தொற்று – யாழ்.காவல் நிலையத்தில் முறைப்பாடு

கண் சத்திரசிகிச்சையில் கிருமி தொற்று – யாழ்.காவல் நிலையத்தில் முறைப்பாடு

by admin
Complaints Key Showing Complaining Or Moaning Online

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்ப்பாணம் தனியார் வைத்தியசாலையில் செய்யப்பட்ட கண் புரைப் பாதிப்புக்கான சத்திரச்சிகிச்சையால் தனது உறவினரின் கண் மேலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரி யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டது.

கண் சத்திரசிகிச்சையால் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் ஒருவரின் உறவினர் ஒருவரே இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளார்.

யாழ்ப்பாணம் காவல் நிலையத்துக்குச் சென்ற அவர், தனது முறைப்பாட்டை வழங்கினார். இந்த முறைப்பாடு தொடர்பில் விசாரணை செய்யப்படும் என  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More