Home இலங்கை புதிய அரசியல் சாசனம் தொடர்பில் விரிவான பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும்

புதிய அரசியல் சாசனம் தொடர்பில் விரிவான பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

புதிய அரசியல் சாசனம் தொடர்பில் விரிவான பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார். மாநாயக்க தேரர்கள், ஏனைய மதத் தலைவர்கள் மற்றும் பொதுமக்களுடன் அரசியல் சாசனம் தொடர்பில் விரிவான பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புதிய அரசியல் சாசனத்தை துரித கதியில் உருவாக்கிவிட முடியாது எனவும் அதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அனைவரது யோசனைகளையும் உள்ளடக்கியே அரசியல் சாசனம் உருவாக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More