Home உலகம் வடகொரிய படைவீரர் மீது சக வீரர்கள் துப்பாக்கிச் சூடு

வடகொரிய படைவீரர் மீது சக வீரர்கள் துப்பாக்கிச் சூடு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வடகொரிய படைவீரர் மீது சக வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். வடகொரிய இராணுவப் படை உத்தியோகத்தர் ஒருவர் தென்கொரியாவிற்கு செல்ல முயற்சித்த போது இந்த  துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. சக வடகொரிய படையினர்  பாதுகாக்கப்பட்ட இராணுவமயமற்ற வலயத்தில் வைத்தே இந்த துப்பாக்கிச் சூட்டினை நடத்தியுள்ளனர்.

வடகொரியாவைச் சேர்ந்த ஆயிரம் பேர் வருடம் தோறும் தென்கொரியாவிற்கு பயணம் செய்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தென் கொரியாவிற்கு செல்ல முயற்சித்த படைவீரர் மீது நடத்தப்பட்ட   தாக்குதலில் குறித்த படைவீரர் காயமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More