Home இலங்கை கோப்பாய் துயிலும் இல்லம் முன்பாக புகைப்படம் எடுத்த சிவில் இராணுவம்…

கோப்பாய் துயிலும் இல்லம் முன்பாக புகைப்படம் எடுத்த சிவில் இராணுவம்…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

அஞ்சலி செலுத்தியவர்களை புகைப்படங்கள் வீடியோக்கள் எடுத்து அச்சுறுத்தும் வகையில் சிவில் இராணுவத்தினர் ஈடுபட்டு இருந்தனர். கோப்பாய் துயிலும் இல்லம் முன்பாக இன்று மதியம் வடமாகாண சபை ஆளும் கட்சி உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன் உள்ளிட்டோர் சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தினர். துயிலும் இல்லத்தினை இராணுவத்தினர் ஆக்கிரமித்து பாரிய இராணுவ முகாம் அமைத்துள்ளமையால் துயிலும் இல்லம் முன்பாக இராணுவ பேருந்துக்களில் அழைத்து வரப்பட்ட பல சிவில் உடை தரித்த இராணுவத்தினர் அஞ்சலி செலுத்தியவர்களை புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்தனர். இருந்த போதிலும் அஞ்சலி செலுத்த வந்தவர்கள் துயிலும் இல்லம் முன்பாக சுமார் 30

நிமிடங்கள் தரித்து நின்று அஞ்சலி நிகழ்வில் ஈடுபட்டனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More