Home பல்சுவை இளம் பாடகிகளை உருவாக்கும், நமீதா பாபுவின் இசைப் பள்ளி…

இளம் பாடகிகளை உருவாக்கும், நமீதா பாபுவின் இசைப் பள்ளி…

by admin

சண்டிவீரன் படத்தில் இடம்பெற்ற ‘அலுங்குறேன் குலுங்குறேன்…’ பாடல் மூலம் திரையிசையில் அடியெடுத்து வைத்து    வளர்ந்து வரும் பின்னணிப் பாடகியான  நமீதா பாபு   தற்போது அவர் இளம் பாடகிகளை உருவாக்கும் வகையில் சென்னையில் ஒரு இசைப் பள்ளியை ஆரம்பித்துள்ளார்.

நல்ல பாடகிகளை உருவாக்கும் நோக்குடன் இன்ஸ்பயர் ஸ்கூல் ஒஃப் மியூசிக் என்ற பெயரில் என்ற இசை பள்ளியைத்  ஆரம்பித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தற்போது, இசைப்பள்ளியைத் தொடங்கியிருக்கும் நமீதா,  தொடர்ந்தும் அருமையான பாடல்களைத்   பாட விரும்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

சிறந்த பின்னணி பாடகியாகவேண்டும் என்பதற்காக தான் மேற்கொள்ளும் உழைப்பு    தன்னை நிச்சயம் உயர்த்தும் என நம்புகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.   தான் மேற்கத்தைய மற்றும் பாரம்பரிய  முறையாக பயிற்சி பெற்றுத் தேர்ந்துள்ளதால் எல்லா வகையான பாடல்களையும் தன்னால் பாட முடியும் எனத் தெரிவித்துள்ள அவர்  நிறைய இசையமைப்பாளர்களோடு இணைந்து பல அருமையான ,   பாடல்களை பாட ஆவலோடு உள்ளேன்  எனவும் தெரிவித்துள்ளார்.

சண்டிவீரன் படத்தினை தொடர்ந்து நமீதா பாபு    திருநாள், மகளிர் மட்டும், வீரய்யன், தீரன் அதிகாரம் ஒன்று உள்ளிட்ட பல படங்களில் பாடியுள்ளார் எ;பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More