Home இலங்கை வடக்கு கிழக்கில் தனித்து போட்டியிடுகிறோம்:-

வடக்கு கிழக்கில் தனித்து போட்டியிடுகிறோம்:-

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-

வடக்கு கிழக்கு மாகாணங்களில் அனைத்து இடங்களிலும் ஈழமக்கள் ஜனநாயக கட்சி தனித்து போட்டியிடும் என அக் கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

சாவகச்சேரி நகர சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி யாழ்ப்பாண மாவட்ட செயலக தேர்தல்கள் அலுவலகத்தில் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா வேட்பு மனுவை நேற்று செவ்வாய்க்கிழமை கையளித்தார். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் அன்றாட பிரச்சனைகளுக்கு உரிய தீர்வாகவும், அபிவிருத்திக்கான தீர்வாகவும், அரசியல் உரிமைகக்கான தீர்வுக்காகவும் இந்த உள்ளூராட்சி தேர்தல் வெற்றி கிடைக்கும்,

யாழ்.மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி சபைகளிலும், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் மிகவிரைவில் வேட்பு மனு தாக்கல் செய்வோம். அதேபோன்று அம்பாறை மாவட்டத்தில், திருக்கோவில் மற்றும் ஆலையடிவேம்பு ஆகிய இடங்களிலும், மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் போட்டியிடுவோம்.

மத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் சுயாட்சி எக்காலத்திலும் பிரிக்க முடியாத வடக்கு கிழக்கு ஒரு அலகு என்பதே எமது கட்சியின் கொள்கை அதனை நாம் எப்போதும் விட்டுகொடுக்க மாட்டோம். என மேலும் தெரிவித்தார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More