Home இலங்கை 8 ஆண்டுகள் சிறையில் – ரெலோ உறுப்பினரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி:-

8 ஆண்டுகள் சிறையில் – ரெலோ உறுப்பினரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி:-

by admin

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கடந்த எட்டு ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த ரெலோ உறுப்பினர் ஒருவரை பிணையில் செல்வதற்கு அநுராதபுரம் மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அநுராதபுரம் மேல் நீதிமன்றில் இந்த வழக்கை விசாரணைக்காக எடுத்து கொள்ளப்பட்ட போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்தமை மற்றும் அதற்கு உடந்தையாக அந்தோனிப்பிள்ளை மரியசீலன் செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் ஆரம்பத்திலேயே செல்வம் அடைக்கலநாதன் பிணையில் செல்ல சட்டமா அதிபர் அனுமதித்திருந்த நிலையில் மரியசீலனை விளக்கமறியில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அத்துடன், குறித்த வழக்கானது ஆரம்பத்தில் வவுனியாவில் இடம்பெற்று வந்த நிலையில் பின்னர் சட்டமா அதிபரால் அநுராதபுரத்திற்கு மாற்றப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த வழக்கானது நேற்றைய தினம் அநுராதபுரம் மேல் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போதே பிணை வழங்கப்பட்டுள்ளது. அதன் போது மன்றில் பிரதிவாதி சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி சிறிகாந்தா முன்னிலையாகியிருந்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More