Home இலங்கை மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழப்பு.

மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் உயிரிழப்பு.

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஆனையிறவு தட்டுவன் கொட்டி பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

யாழ் – கண்டி வீதியில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற குறித்த விபத்தில் தட்டுவன் கொட்டியை சேர்ந்த சிங்கராஜா செந்தில்நாதன் (வயது 29) மற்றும் கரவெட்டியை சேர்ந்த நல்லதம்பி துஸ்யந்தன் (வயது 36) ஆகிய இருவருமே உயிரிழந்துள்ளனர். பெண்ணொருவர் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

எதிரெதிரே பயணித்த இரு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதியதாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More