Home இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது – பிரதமர்

தேர்தல் ஆணைக்குழுவின் தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது – பிரதமர்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தேர்தல் ஆணைக்குழுவின் தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ம் திகதி உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கடந்த அரசாங்கத்தினால் இழைக்கப்பட்ட தவறுகள் திருத்திக் கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். வலுவான பொருளாதாரத்தை உருவாக்காது உள்ளுராட்சி மன்றங்களுக்கு போதியளவு நிதி உதவிகளை வழங்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிப்பதன் மூலம் மட்டுமே உள்ளுராட்சி மன்றங்களை சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More