Home இந்தியா ஜேக்கப் தோமஸை கேரள அரசாங்கம் இடைநீக்கியது…

ஜேக்கப் தோமஸை கேரள அரசாங்கம் இடைநீக்கியது…

by admin

ஐபிஎஸ் உயர் அதிகாரியும் முன்னாள் ஊழல் கண்காணிப்புத் துறை மற்றும் தடுப்புத் துறை இயக்குநருமான ஜேக்கப் தோமஸை கேரள அரசாங்கம் இடைநீக்கம் செய்துள்ளது. கடந்த டிசம்பர் 9-ம் திகதி திருவனந்தபுரத்தில் நடைபெற்ற விழாவில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதைத் தொடர்ந்து, அவர்மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த நிகழ்ச்சியில், கேரள மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருப்பதாகவும் ஊழலுக்கு எதிராகப் போராட மக்கள் அச்சப்படுவதாகவும் அவர் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டி.பி.சந்திரசேகரன் கொலை வழக்கு குறித்து ஜேக்கப் தோமஸ் உரையாற்றயதாகவும் அத்துடன் ஒக்கி புயலால் கடலில் காணாமல் போன மீனவர்கள், பணக்காரர்களின் பிள்ளைகளாக இருந்தால்கூட அரசு இப்படிப்பட்ட நடவடிக்கையைத்தான் எடுத்திருக்குமா எனவும் ஜேக்கப் கேள்வி எழுப்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More