Home இலங்கை 2017ம் ஆண்டிற்கான தேசிய மீலாத் விழா யாழில் :

2017ம் ஆண்டிற்கான தேசிய மீலாத் விழா யாழில் :

by admin

2017ம் ஆண்டிற்கான தேசிய மீலாத் விழா நிகழ்வுகள் நேற்றையதினம் யாழில் சிறப்பாக இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் ஒஸ்மானியாக் கல்லூரி வளாகத்தில் ஆரம்பமான இந்நிகழ்வில், பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் மற்றும் தபால் அமைச்சர் எம். எச். எம். ஹலீம், வர்த்தக வாணிப அமைச்சர் றிசாட் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது ஞாபகார்த்தமாக முத்திரை ஒன்றும் உத்தியோகபூர்வமாக வெளியிட்டு வைக்கப்பட்டது. சபாநாயகர் கரு ஜெயசூரிய மற்றும் முஸ்லிம் சமய ண்பாட்டலுவல்கள் மற்றும் தபால் அமைச்சர் எம். எச். எம். ஹலீம் ஆகியோர் இணைந்து ஞாபகார்த்தமாக முத்திரை வெளியிட்டு வைத்தனர்.

15 ரூபா பெறுமதியான இம்முத்திரையில் யாழ்ப்பாணம் முகமதியா ஜும்மா பள்ளிவாசலின் முகத்தோற்றம் (புதுப்பள்ளி) அச்சிடப்பட்டுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More