Home இலங்கை யாழ். பருத்தித்துறையில், 12 வயது பாடசாலை மாணவியை கடத்திய 19 வயது இளைஞர் கைது…

யாழ். பருத்தித்துறையில், 12 வயது பாடசாலை மாணவியை கடத்திய 19 வயது இளைஞர் கைது…

by admin

யாழ். பருத்தித்துறை பகுதியில் 12 வயது பாடசாலை மாணவியை கடத்தி சென்று பாலியல் ரீதியாகவும், கூரிய ஆயுதங்களாலும் கொடுமைப்படுத்திய குற்றசாட்டில் 19 வயது இளைஞர் ஒருவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.

பாடசாலைக்கு நேற்றைய தினம் புதன்கிழமை காலை சிறுமி சென்ற நிலையில் மாலை சிறுமி வீடு திரும்பவில்லை. அதனால் பெற்றோர் சிறுமியை தேடி அலைந்த நிலையில் ஊரவர்கள் சில வழங்கிய தகவலின் அடிப்படையில் , சிறுமியின் வீடு அமைந்துள்ள பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரின் வீட்டுக்கு சென்ற பெற்றோர் அங்கு அறை ஒன்றில் இருந்து கையில் காயங்களுடன் தமது மகளை மீட்டு உள்ளனர். அதனை அடுத்து மீட்கப்பட்ட தமது மகளை சிகிச்சைக்காக மந்திகை வைத்தியசாலையில் சேர்ந்ததுடன் காவல் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்தனர்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட காவற்துறையினர் சிறுமி கடத்தி வைக்கப்பட்டு இருந்த வீட்டில் இருந்த இளைஞனை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞனிடம் விசாரணைகளை மேற்கொண்ட போது கடந்த 3 மாத காலமாக தான் சிறுமியை காதலித்து வந்ததாகவும் , அதனாலையே தனது வீட்டுக்கு அழைத்து சென்றதாகவும் தெரிவித்துள்ளார். குறித்த இளைஞனிடம் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை மந்திகை வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமி இன்று வியாழக்கிழமை யாழ்.போதனா வைத்திய சாலை பெண் நோயியல் பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More