Home உலகம் மஹிந்தவுக்கு குண்டு துளைக்காத வாகனங்களா? யார் சொன்னது!

மஹிந்தவுக்கு குண்டு துளைக்காத வாகனங்களா? யார் சொன்னது!

by admin

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ குண்டு துளைக்காத வாகனங்கள் இரண்டை கொள்வனவு செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பல்வேறு ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வௌியிடப்பட்ட செய்திகளில் உண்மை இல்லை என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. மஹிந்த ராஜபக்சவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவரை பாதுகாக்க குண்டு துளைக்காத வாகனங்களை அரசாங்கம் இறக்குமதி செய்துள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவியுள்ளதாக பிரதமர் அலுவலகம் குறிப்பிடுகின்றது.

எனினும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்காக இதுவரை எந்த புது வாகனங்களும் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More