Home இந்தியா நிமோனியா நோயால் இந்தியாவில் 2 நிமிடத்துக்கு ஒரு குழந்தை உயிரிழக்கின்றது

நிமோனியா நோயால் இந்தியாவில் 2 நிமிடத்துக்கு ஒரு குழந்தை உயிரிழக்கின்றது

by admin


வயிற்றுப்போக்கு மற்றும் நிமோனியா எனப்படும் நுரையீரல் அழற்சி நோய் காரணமாக இந்தியாவில் 2 நிமிடத்துக்கு ஒரு குழந்தை உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பெருமளவில் தாக்குகின்ற இந்த நிமோனியா நோய் குறித்து அண்மையில் வெளியாகியுள்ள அறிக்கையிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டள்ளது.

2016-ம் ஆண்டு சர்வதேச அளவில் எடுக்கப்பட்ட கணக்கின்படி இந்தியாவில் தினமும் 735 குழந்தைகள் இறக்கின்றன எனவும் இதன்படி இந்த நோய்க்கு இந்தியாவில் 2 நிமிடத்துக்கு ஒரு குழந்தை உயிரிழப்பதாக கணக்கிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்தநிலையில் வயிற்றுப்போக்கு மற்றும் நிமோனியாவை தடுக்க அதற்கான தடுப்பூசிகள் போடப்பட வேண்டும் எனவும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதுடன் அவ்வப்போது தேவையான நோய் எதிர்ப்பு சக்தி மருந்து மாத்திரைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் குறித்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நோய் வராமல் தடுக்கும் தற்காப்பு நடவடிக்கைகள் இந்தியாவில் முன்னேற்றம் அடைந்துள்ள போதிலும் அதற்கான சரியான சிகிச்சை முறைகள் செயல்படுத்தப்படுவதில்லை எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More