Home இலங்கை கரு பதவி விலக வேண்டும் என்கிறார் வீர­கு­மார….

கரு பதவி விலக வேண்டும் என்கிறார் வீர­கு­மார….

by admin

சபா­நா­யகர் பாரா­ளு­மன்ற சம்­பி­ர­தாயம் மற்றும் நிலையியற் கட்­ட­ளையின் பிர­காரம் பாராளுமன்றத்தை வழி­ந­டத்­திச்­ செல்­ல முடி­யா­விட்டால் பதவி விலகி சுயாதீனமாக  செயற்படக் கூடிய ஒருவரை  நிய­மிக்கஇட­ம­ளிக்­க­வேண்டும் என பிரதி அமைச்சர் வீர­கு­மார திஸா­நா­யக்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி தலை­மை­ய­கத்தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்து  தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 பாரா­ளு­மன்­றத்தில் இருக்கும் 225 உறுப்­பி­னர்­களின் உரி­மை­களை பாது­காப்­பதே சபா­நா­ய­கரின் கட­மை­யாக உள்ள போதிலும்   கரு ஜய­சூ­ரிய ஐக்­கிய தேசிய கட்­சியை பாது­காக்கும் வகை­யிலே செயற்­பட்டு வரு­கின்றார் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

பாரா­ளு­மன்­றத்தில் கடந்த 3 தினங்கள் ஏற்பட்டிருந்த  பிரச்­சினையானது   சபாநாயகர்  பாராளுமன்ற  நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் சுயா­தீ­ன­மாக செயற்­பட்­டி­ருந்தால்   ஏற்பட்டு இருக்காது   எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More