Home இலங்கை பாராளுமன்றம் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதிவரை ஒத்தி வைக்கப்பட்டது!

பாராளுமன்றம் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதிவரை ஒத்தி வைக்கப்பட்டது!

by admin


இலங்கைப் பாராளுமன்றம் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி காலை 10.30 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார். இன்று காலை 10.30 மணிக்கு கூடிய பாராளுமன்ற கூட்டத் தொடரில் அமைச்சரவை அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அரசாங்க நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்காதிருப்பதற்கான பிரேரணை நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் பாராளுமன்றத்தை பிற்போடுவதாக சபாநாயகர் அறிவித்தார். இதேவேளை இன்றைய பாராளுமன்ற அமர்விலும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More