Home இலங்கை மட்டக்களப்பு காவல்துறையினர் படுகொலை நாட்டை குழப்பும் செயல் – அப்பாவிகள் கைது:

மட்டக்களப்பு காவல்துறையினர் படுகொலை நாட்டை குழப்பும் செயல் – அப்பாவிகள் கைது:

by admin

மட்டக்களப்பில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அப்பாவிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இது நாட்டை குழப்பும் வகையில் இடம்பெற்றுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்ற அமர்வின் சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தின்போதே அவர் இதனைக் கூறினார்.

குறித்த திட்டமிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்றும் ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். நாட்டில் அரசியல் குழப்பநிலை ஏற்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் நடைபெற்ற இப் படுகொலைக்கு மன்றில் கடும் கண்டனத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

அத்துடன், அரசியல் நோக்கத்திற்காக நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் சிலரால் இச்செயற்பாடு திட்டமிட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளதென்றும் ஸ்ரீநேசன் மேலும் குறிப்பிட்டார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More