Home இந்தியா கவுதம் கம்பீருக்கு பிடியாணை

கவுதம் கம்பீருக்கு பிடியாணை

by admin


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீருக்கு பிடியாணை பிறப்பித்து டெல்லி சாஹேத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனமான ருத்ரா பில்ட்வெல் ரியாலிட்டி நிறுவனத்தின் வர்த்தக தூதுவராக கவுதம் கம்பீர் செயல்பட்டு வந்தநிலையில், அந்த நிறுவனத்தின் இயக்குநர்களான முகேஷ் குராணா, கவுதம் மேத்தா ஆகியோர் முதலீட்டாளர்களை ஏமாற்றிவிட்டதாகவும், குறித்த நேரத்தில் வீடுகளை கட்டித்தரவில்லை எனவும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.  இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட வழக்கு தொடர்பாக ரியல் எஸ்டேட் நிறுவன அதிபர் முகேஷ் குராணா, மேத்தா ஆகியோர் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில், ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்து, விளம்பரங்களில் நடித்து தூதுவராக செயல்பட்ட கம்பீருக்கு எதிராகவும் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கம்பீர் தரப்பில் வழக்கறிஞர்கள் வாதாடி கம்பீர் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் தூதுவராக மட்டுமே இருந்தார், அவருக்கும் நிறுவனத்துக்கும் தொடர்பில்லை என்று தெரிவித்தனர்.

இந்தநிலையில் இந்த வழக்கின் விசாரணை நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் , கவுதம் கம்பீர் நேரில் ஏன் நேரில் முன்னிலையாகமாமல் தொடர்ந்து புறக்கணிக்கிறாரா என நீதிபதி கேள்வி எழுப்பியதற்கு வழக்கறிஞர்கள் தரப்பில் பதில் தாக்கல் செய்யவில்லை.

இதையடுத்து, கவுதம் கம்பீருக்கு எதிராக 10 ஆயிரம் மதிப்பில் பிணையில் வெளிவரக்கூடிய பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்ட நீதிபதி அடுத்த முறை நீதிமன்றத்தில் அவர் முன்னிலையாக வேண்டும் வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இந்திய அணியில் 15 ஆண்டுகளாகவும், 20 ஆண்டுகளுக்கு மேலாகவும் கிரிக்கெட் விளையாடிய கம்பீர் இம்மாத தொடக்கத்தில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More