Home உலகம் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பது குறித்து வடகொரியாவிற்கும் தென்கொரியாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை

குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பது குறித்து வடகொரியாவிற்கும் தென்கொரியாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

குளிர்கால ஒலிம்பிக் போட்டித் தொடரில் பங்கேற்பது குறித்து வடகொரியாவிற்கும் தென் கொரியாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. எதிர்வரும் 9ம் திகதி உயர்மட்டப்பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. தென் கொரியாவில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டித் தொடரில் வடகொரிய வீர வீராங்கனைகள் பங்கேற்பது தொடர்பில் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. வடகொரிய தென் கொரிய எல்லைப் பகுதியான பன்முஜோம் ( Panmunjom ) இல் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

Panmunjom

ஒலிம்பிக் போட்டிகளில் வடகொரிய வீர வீராங்கனைகளை பங்கேற்கச் செய்வது குறித்த பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கத் தயார் என வடகொரியா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More