Home இலங்கை மக்களுக்காக தெரிவு செய்யப்பட்டவர்கள் மக்கள் முன்னிலையிலே சத்தியப்பிரமாணம் – சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு

மக்களுக்காக தெரிவு செய்யப்பட்டவர்கள் மக்கள் முன்னிலையிலே சத்தியப்பிரமாணம் – சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மக்களின் நலனுக்காகவும் பிரதேசங்களின் மேம்பாட்டுக்காகவும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் (சுயேச்சைக்குழுவின்) பிரதேச சபை உறுப்பினர்கள் மக்களின் முன்னிலையிலே சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளனர். இந்த நிகழ்வு அடுத்த சில தினங்களில் கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது என சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஸ்தாபகரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

மக்கள் பிரதிநிதிகள், மக்களுக்கான பணிகளை மக்களின் முன்னிலையிலேயே செயற்படுத்த வேண்டியவர்கள். மக்கள் நலனை, மக்களின் விருப்பம், மக்களுடைய ஆலோசனை, மக்களின் தேவைகள், மக்களின் அவதானிப்பு, மக்களின் பங்கேற்பு ஆகியவற்றின் அடிப்படையில் செய்ய வேண்டும். இதையே இன்றைய உலகம் வழிமொழிகிறது. அனைத்திலும் மக்களுக்கு உரித்தும் மக்களுடைய பங்கேற்பும் இருக்க வேண்டும் என்ற பாரம்பரியத்தை உருவாக்க வேண்டும் என்ற சிந்தனையின் அடிப்படையில், எமது மக்களின் விருப்பத்துக்கும் தேவைக்கும் அமைய மக்களுக்கு விசுவாசமாகவும் அர்ப்பணிப்புடனும் நாம் செயற்படுவோம் என சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் சார்பில் சுயேச்சைக்குழுவாக நின்று கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் மக்களின் முன்னிலையில் தமது பதவிப் பிரமாணத்தைச் செய்யவுள்ளனர்.

இதைக் குறித்த விவரங்களை நாம் சில தினங்களில் பொது மக்களுக்கு அறியத் தருவோம் என அந்த அமைப்பின் சார்பாக விடுத்துள்ள செய்தியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More