Home இலங்கை எதி­ரான பிரேரனைக்கு ஆத­ர­வாக ஐ தே கவினர் எவ­ரா­வது வாக்களித்தால் கடும் நடவடிக்கை…

எதி­ரான பிரேரனைக்கு ஆத­ர­வாக ஐ தே கவினர் எவ­ரா­வது வாக்களித்தால் கடும் நடவடிக்கை…

by admin

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் எவ­ரா­வது வாக்களித்தால் அவர்­க­ளுக்கு எதிராக  ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­வ­துடன்  கட்­சியில் இருந்து நீக்­கப்­ப­டுவர் என ஐக்­கிய தேசியக் கட்சி தெரி­வித்­தது.

அத்­துடன் நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை மீதான வாக்­கெ­டுப்பு தினத்­தன்று  ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் அனை­வரும் பாராளுமன்றில் பிரசன்னமாக ­வேண்டும். அதற்கான  ஆலோ­ச­னைகள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது என்றும் என்றும் அக்­கட்சி குறிப்­பிட்­டது.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் செயற்­குழு கூட்டம் நேற்று சிறி­கொத்­தாவில் நடை­பெற்­றது. இந்த கூட்­டத்தின் பின்னர் கட்­சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  பலர் ஊடகங்களுக்கு கருத்து தெரி­வித்­தனர். இதன்­போது கட்­சியின் பிரதி பொதுச்­செ­ய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான அகில விராஜ் காரி­ய­வசம்  ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே    அவர்  மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இதன்­போது நாடாளுமன்ற உறுப்பினர்  ரவி கரு­ணா­நா­யக்க  ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கையில்

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை தோற்­க­டிக்க வேண்­டி­யது எமது கட­மை­யாகும். அதனை நாம் செய்ய வேண்டும். ஆகவே எதிர்­வரும் நான்காம் திக­தி­யன்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை தோற்­க­டிப்­ப­தனை நாட்டு மக்கள் கண்டு கொள்வர் ­கொ­ளவர். அதன்­பின்னர் கட்சியின்  பலம் அதி­க­ரிக்கும் எனக் கூறியுள்ளார்.

 அமைச்சர் சஜித் பிரே­ம­தாஸ கருத்து வெளி­யி­டு­கையில்,

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா  பிரே­ர­ணையை தோற்­க­டித்­ததன் பின்னர் கட்­சியில் மறு­சீ­ர­மைப்பு நடவடிக்கைகளை  முன்­னெ­டுப்போம். அத்­துடன் கட்­சியின் தலைமை பொறுப்பை ஏற்­கு­மாறு யாரும் என்­னிடம் கோர­வில்லை. இந்த பொறுப்பை ஒப்­ப­டைத்தால் உரிய வகையில் நான் செயற்­பட தயா­ராக உள்ளேன். எனினும் தற்­போ­தைக்கு கட்சி தலைவர் ஒருவர் உள்ளார். ஆகவே அவ­ருக்கு கட்­டுப்­பட்டு நடக்க வேண்டும். மேலும் தெல்தெனிய சம்பவத்திற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கதான் காரணம் என்று கூட்டு எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா பிரேரணையில் கூறியுள்ளனர். அப்படியாயின் நம்பிக்கையில்லா பிரேரணையை கூட்டு எதிர்க்கட்சிக்கு எதிராகவே கொண்டு வர வேண்டும். ஏனெனில் தெல்தெனிய சம்பவத்தின் சூத்திரதாரியை கண்டறிய கூட்டு எதிர்க்கட்சியினர் கண்ணாடி முன்நின்றால் உண்மை தெரியவரும் என்றார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More