Home இலங்கைகாணாமல் ஆக்கப்படவர்களின் பிரச்சனையை பணியகம் பார்க்கும்

காணாமல் ஆக்கப்படவர்களின் பிரச்சனையை பணியகம் பார்க்கும்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சனைகளை காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பணியகம் பார்க்கும் என முன்னாள் ஜனாதிபதியும் , தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகத்தின் தலைவருமான சந்திரிக்கா குமாரதுங்கா தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சந்திரிக்காவிற்கும் , உளவியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொது அமைப்புக்களுடன் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்போது உளவியல் செயற்பாட்டாளர்களால் , எமது பிரதேசங்களில் காணாமல் ஆக்கப்படவர்களில் உறவினர்கள் , தமது உறவுகள் எங்கோ ஓர் இடத்தில் உயிருடன் மறைத்து வைக்கப்பட்டு உள்ளனர் என நம்பிக்கையுடன் இருக்கின்றார்கள். அதனால் அவர்கள் கடும் மனவுளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர் என எடுத்து கூறினார்கள்.

அதற்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதியும் , தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகத்தின் தலைவருமான சந்திரிக்கா குமாரதுங்கா , அவர்களுடைய பிரச்சனைகளை தீர்ப்பதற்காக தான் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பணியகம் உருவாக்கப்பட்டு உள்ளது. அவர்கள் அது தொடர்பில் பார்த்துக்கொள்வார்கள். நாம் அந்த குடும்பங்களின் பொருளாதார ரீதியான முன்னேற்றத்திற்கு உதவ வேண்டும் என தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More