Home உலகம் சிரியாவின் கிழக்கு கூட்டா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நச்சு வாயு தாக்குதலில் குறைந்தது 70 பேர் உயிரிழப்பு

சிரியாவின் கிழக்கு கூட்டா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நச்சு வாயு தாக்குதலில் குறைந்தது 70 பேர் உயிரிழப்பு

by admin


சிரியாவின் கிழக்கு கூட்டா பகுதியில், கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கடைசி நகரமான டூமாவில் நடத்தப்பட்ட நச்சு வாயு தாக்குதலில் குறைந்தது 70 பேர் உயிரிழந்ததாக மீட்பு மற்றும் மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர். கட்டடத்தின் அடிதளத்தில் பல சடலங்கள் உள்ள புகைப்படங்களை தன்னார்வ மீட்பு படையினரான  வைட் ஹெல்மட்ஸ் குழு பகிர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரசாயன தாக்குதல் நடத்தியதாக தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள சிரிய அரசாங்கம் அவை சோடிக்கப்பட்டவை எனத் தெரிவித்துள்ளது என்று தெரிவித்துள்ளது. வாயு தாக்குதல் நடைபெற்றதாக தெரிவிக்கப்படும் நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கூட்டா ஊடக மையம் ஹெலிகொப்டர் மூலம் வீசப்பட்டதாக கூறப்படும் உருளை குண்டில் சரின் எனப்படும் நச்சு இருந்ததாக தெரிவித்துள்ளது. கிழக்கு கூட்டா பகுதியில்,கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கடைசி நகரமான டூமா, சிரிய அரசு படையினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை தாக்குதல்களில் ரசாயனங்கள் பயன்படுத்தப்பட்டு இருந்தால், சிரிய அரசுடன் இணைந்து செயற்படும் ரஸ்யாதான் அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

 

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More