Home சினிமா 15ஆண்டுகளின் பின்னர் சாமி படத்தின் இரண்டாம் பாகம் – திரிஷாவும் இணைவாரா?

15ஆண்டுகளின் பின்னர் சாமி படத்தின் இரண்டாம் பாகம் – திரிஷாவும் இணைவாரா?

by admin



சாமி பாகம் இரண்டு படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில், சாமி படத்தில் இடம்பெற்ற திருநெல்வேலி அல்வாடா பாடலைப் போன்று இரண்டாம் பாக்கத்திலும் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் ஒரு பாடல் இடம்பெறுவதாக படக் குழு தெரிவித்துள்ளது.  சாமி 2ஆம் பாகத்திற்கான காட்சிகள் திருநெல்வேலியின் முக்கிய பகுதிகள் மற்றும் காரைக்குடியில் படமாக்கப்படுகின்றன. ஹரி இயக்கத்தில் கடந்த 2003ஆம் ஆண்டில் வெளியான சாமி படத்தின் தொடர்ச்சியாக 15 ஆண்டுகளின் பின்னர் சாமி-2 படம் உருவாகி வருகிறது. சாமி படத்தின் தொடக்க பாடலான திருநெல்வேலி அ டா பாடல் பிரபலமானது. இந்த பாடல் திருநெல்வேலியின் முக்கிய பகுதிகளில் நடப்பதாக இருக்கும். ஆனால் திருநெல்வேலியில் எடுக்கப்படவில்லை. உண்மையில் காரைக்குடியிலேயே படமாக்கப்பட்டது.

இப்போது இரண்டாம் பாகத்துக்கும் அதே காரைக்குடியில் அதே திருநெல்வேலி பகுதிகளை செயற்கை களம் (செட்) அமைத்து படமாக்கப்பட்டுள்ளது. ’டர்ர்ர்ரனக்கா…டர்ர்ர்ரனக்கா…’ என்று தொடங்கும் பாடல் முன்னைய பாகத்தின் பாடலை விடவும் பெரும் வரவேற்றை பெரும் என்கிறது படக்குழு.

சாமி-2 படத்தில் முந்தைய பாகத்தில் நடித்த திரிஷா தவிர அனைவருமே நடிக்கிறார்கள். கீர்த்தி சுரேஷும், சூரியும் புது வரவுகள். த்ரிஷா நடிப்பார் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார் இயக்குநர் ஹரி. எனினும் இப்படத்தில் நடிப்பதை நடிகை திரிஷா இன்னமும் அதனை உறுதிப்படுத்தவில்லை.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More