Home இந்தியா தன்னம்பிக்கையும் பெற்றோரின் உறுதியும், இழந்த கண்களுக்கு ஒளியூட்டின – கலெக்டர் ஆனார் பிரஞ்ஜாலின்

தன்னம்பிக்கையும் பெற்றோரின் உறுதியும், இழந்த கண்களுக்கு ஒளியூட்டின – கலெக்டர் ஆனார் பிரஞ்ஜாலின்

by admin

தனது 2 வயதில் பார்வையை இழந்தாலும் மனஉறுதி குலையாமல் கடுமையாக போராடி ஐ.ஏ.எஸ் தேர்வில் வென்ற பிரஞ்ஜாலின் பட்டில் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் பயிற்சி கலெக்டராக பொறுப்பேற்றுள்ளார்.  பிரஞ்ஜாலின் பட்டிலுக்கு 2 வயதாக இருந்தபோது காய்ச்சலால் 2 கண்களின் பார்வையும் பறிபோனாலும் அவரது பெற்றோர கொடுத்த தைரியமும், ஊக்கமும் அவருக்கு சமூக சேவையில் ஈடுபடவேண்டும் என்ற வளரவளர தோற்றுவித்தது.

படிப்பிலும் மிகவும் ஆர்வத்துடன் இருந்த அவர் தொடுதிரை உதவியுடன் மும்பை கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்திருந்தார். இதன்பின்னர் டெல்லியில் உள்ள சர்வதேச கல்லூரியில் எம்.பில். மற்றும் பி.எச்.டி. டாக்டர் பட்டங்களை முடித்தார்.கடந்த 2014-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்.தேர்வு எழுதிய அவருக்கு 773-வது இடமே கிடைத்ததால் அவரால் கலெக்டர் ஆக முடியவில்லை என்பதனால் புகையிரத துறையில் தேர்வாகி கணக்கு பிரிவில் வேலைக்கு சேர்ந்தார்.

எனினும் அவரது கலெக்டர் ஆகும் கனவு தொடர்ந்தும் அவரது எண்ணத்தில் இருந்தமையினால் அவர் 2017-ம் ஆண்டு மீண்டும் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி 124-வது இடத்தை பிடித்துள்ளார்.இந்த இடம் கலெக்டர் தேர்வுக்கு போதுமானதாக இருந்ததனால் அவர் நேற்று கேரள மாநிலம் எர்ணாகுளம் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி கலெக்டராக பொறுப்பேற்றார்.

தனக்கு ஊக்கமும், தைரியமும் கொடுத்து வளர்த்த தனது தாய் தன்னை இருக்கையில் அமர வைக்க வேண்டும் என உயர் அதிகாரிகளிடம் அனுமதி கேட்டு அனுமதி பெற்று அதனையும் நிறைவேற்றினார். நேரடி கலெக்டர் தேர்வில் இந்தியாவிலேயே கண்பார்வை இழந்த மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் கலெக்டராக பொறுப்பேற்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More