Home இலங்கை தயாசிறி ஜயசேகரவிடம் இன்று விசாரணை

தயாசிறி ஜயசேகரவிடம் இன்று விசாரணை

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி விவகாரத்தில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அர்ஜூன் அலோசியஸிடம் 10 லட்சம் ரூபா பணத்தை பெற்றுக்கொண்ட சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களம், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவிடம் இன்று விசாரணை நடத்தவுள்ளது.

பணத்தை பெற்றுக்கொண்ட சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை வழங்க குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு தயாசிறி ஜயசேகரவுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்புக்கு அமைய தயாசிறி இன்று முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கவுள்ளார்.

அர்ஜூன் அலோசியஸிடம் பெற்ற 10 லட்சம் ரூபாவுக்கான காசோலையை தயாசிறி ஜயசேகர தனது பாதுகாப்பு அதிகாரி ஊடாக பணமாக மாற்றியமாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் பிணை முறி மோசடியில் கிடைத்த பணத்தில் இருந்து இதனை வழங்கினாரா என்பது குறித்து தயாசிறியிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More