Home சினிமா தமிழகத்திலேயே படப்பிடிப்பு! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த விசுவாசம் படக்குழு

தமிழகத்திலேயே படப்பிடிப்பு! சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த விசுவாசம் படக்குழு

by admin


சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக அஜித் நடித்து வரும் திரைப்படம் விசுவாசம். இந்தப் படத்திற்கான படப்பிடிப்புக்கள் வெளி மாநிலங்களில் இடம்பெறவுள்ளதாக வெளிவந்த வதந்திக்கு படக்குழுவினர்  முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

சிவா இயக்கத்தில் அஜித் நான்காவது தடவையாக நடித்து வரும் படம் ‘விசுவாசம்’. ஐதராபாத்தில் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. அடுத்தகட்ட படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று அஜித் ரசிகர்கள் காத்திருந்தனர்.அடுத்த கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக செய்தி வந்துள்ளது.

சென்னையில் முக்கிய இடங்களில் வரும் 27 ஆம் தேதி முதல் படப்பிடிப்பை தொடங்க இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதற்கான படப்பிடிப்பு அனுமதி, பாதுகாப்பு குறித்து திரைப்பட குழு திட்டமிட்டு வருகிறது. அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். டி.இமான் இசையமைக்கும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
தற்போது வெளிமாநிலங்களில் படப்பிடிப்புக்களை மேற்கொள்ளுதல், தமிழகத்தில் இடம்பெறும் படப்பிடிப்புக்களுக்கு வெளிமாநில தொழிலாளர்களைப் பயன்படுத்தல் என்பவற்கு தமிழகத்தில் எதிர்ப்புக்கள் எழுந்து வருகின்றன.

அத்துடன் அஜித் படங்களுக்கு தொடர்ந்து வெளி மாநிலங்களில் படப்பிடிப்பு நடைபெறுவதால் தமிழ்நாட்டில் இருக்கும் சினிமா தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாக ஒரு சர்ச்சை ஏற்பட்டது. அதற்கு சென்னை படப்பிடிப்பு மூலம் முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறது படக்குழு.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More