Home இந்தியா மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் 51 கடைகளை மட்டும் திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் 51 கடைகளை மட்டும் திறக்க உயர்நீதிமன்றம் அனுமதி

by admin


மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் 51 கடைகளை மட்டும் திறக்க இன்று உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியிலுள்ள கடைகளில் பெப்ரவரி மாதம் தீவிபத்து ஏற்பட்டதனையடுத்து, கோவில் வளாகங்களில் உள்ள கடைகளை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடை உரிமையாளர்கள் சங்கம் சார்பாக வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில் குறித்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம், மீனாட்சி அம்மன் கோவில் சன்னிதி அருகே உள்ள 51 கடைகளை மட்டும் திறந்து கொள்ள அனுமதி வழங்கியுள்ளது.

மேலும், டிசம்பர் 31-ம் திகதி வரை கடைகளை நடத்துவதாக என உறுதிமொழி பத்திரம் அளிக்குமாறும், வாடகை நிலுவைகளை முறையாக கோவில் நிர்வாகத்திடம் அளிக்குமாறும் கடை உரிமையாளர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More