Home இலங்கை மன்னார் உயிலங்குளத்தில் பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் அலுவலகம் திறந்து வைப்பு….

மன்னார் உயிலங்குளத்தில் பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் அலுவலகம் திறந்து வைப்பு….

by admin

மன்னார் உயிலங்குளத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் அலுவலகம் இன்று (2.8.18) வியாழக்கிழமை காலை 10 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மாகாண விவசாயப்பணிப்பாளர் எஸ்.சிவகுமார் தலைமையில் இடம் இடம் பெற்ற குறித்த நிகழ்வின் போது வடமாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசனுடன் இணைந்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே.ஏ.மோகன்ராஸ் , வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன், ஆகியோர் இணைந்து வைபவ ரீதியாக குறித்த பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் அலுவலகத்தினை திறந்து வைத்தனர்.

இதன் போது பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் , உத்தியோகஸ்தர்கள்,நானாட்டான் பிரதேச சபையின் தலைவர்,உப தலைவர், உறுப்பினர்கள், விவசாய அமைப்புக்களின் பிரதி நிதிகள்,பொது அமைப்புக்களின் பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More