Home இலங்கை “எல்லாம் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னால் என்ன செய்யப் போகிறோம்”

“எல்லாம் வேண்டாம் வேண்டாம் என்று சொன்னால் என்ன செய்யப் போகிறோம்”

by admin

வாக்குறுதியை நிறைவேற்றத் தவறினால் ஐ.நாவில் மீண்­டும் தீர்­மா­னம் நிறை­வேற்ற நேரிடும்!  எம்.ஏ. சுமந்­தி­ரன்

இலங்கை அரசு இணங்­கிக் கொண்ட விட­யங்­களைச் செயற்­ப­டுத்த தவறினால் ­சர்வதேச அழுத்­தத்­தைக் கொடுப்­ப­தற்கு சர்வதேச மேற்­பார்வை நீடிக்­கப்­ப­ட­வேண்­டும் என தெரிவித்துள்ள தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், அந்­தக் கட்­சி­யின் பேச்­சா­ள­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன் இதற்காக ஐ.நா. மனித உரிமைகள் சபை­யில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இன்­னு­மொரு தீர்­மா­னம் நிறை­வேற்­ற­ வேண்­டும் என்றும் கூறியுள்ளார்.

கொழும்பில்  நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர்  2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்­து­டன் இலங்கை மீதான சர்வதேச கண்­கா­ணிப்பு முடிவுற்றது. தீர்­மா­னத்­தில் சொல்­லப்­பட்ட விட­யங்­களை இலங்கை அரசு நிறை­வேற்­று­வ­தற்கு, அதன் மீது சர்வதேச அழுத்­தம் பிர­யோ­கிக்­கப்­ப­ட­வேண்­டும் என்று அவர் குறிப்பிட்டார்.

அழுத்­தத்­தைப் பிர­யோ­கிப்­ப­தற்கு சர்வதேச கண்­கா­ணிப்பு இலங்கை மீது இருக்­க­வேண்­டும் என்றும் 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கை மீதான சர்வதேச கண்காணிப்பு  இரண்டு ஆண்­டு­க­ளுக்கு நீடிக்­கப்­பட்­டதாகவும் அவர் கூறினார்.

2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்­தில் இலங்கை மீதான பன்­னாட்டு மேற்­பார்­வையை நீடிப்­ப­தற்கு மற்­றொரு தீர்­மா­னம் அவ­சி­யம் என கூறிய அவர் அந்­தத் தீர்­மா­னம் சில வேளை­க­ளில் நிறை­வேற்ற முடி­யா­மல் போகும் நிலமையும் ஏற்படலாம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் அமெ­ரிக்கா இல்லை. அமெ­ரிக்­கா­வுக்கு வாக்­க­ளிக்­கும் தகுதி இல்லை. இலங்கை அர­சை­யும் இணங்­கச் செய்யும் அளவிற்கு    சாத்­தி­யம் இருக்­குமோ தெரி­ய­வில்லை எனக் குறிப்பிட்ட அவர் ஐ.நா. செய­லர் மற்­றும் ஐ.நா. பொதுச் சபை­யின் ஊடாக அழுத்­தம் கொடுத்து பன்­னாட்டு மேற்­பார்­வையை நீடிப்­ப­தற்­கான தீர்­மா­னத்தை நிறை­வேற்­ற­வேண்­டி­யுள்­ளது  எனத் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரி­மை­கள் சபை வேண்­டாம், பன்­னாட்டு மேற்­பார்வை வேண்­டாம் என்று சொல்­ப­வர்­கள், மாற்று வழி என்ன என்­ப­தைச் சொல்­வ­தில்லை. “எல்லாம் வேண்டாம் வேண்டாம்” என்று சொன்னால் என்ன செய்யப் போகிறோம். இருப்­ப­தை­யும் விட்டு அடுத்து என்ன செய்­யப்­போ­கின்­றோம் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More