Home இந்தியா கேரள பேரழிவை உலகம் முழுக்க கொண்டு சென்ற இசைப்புயல்

கேரள பேரழிவை உலகம் முழுக்க கொண்டு சென்ற இசைப்புயல்

by admin


இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் கேரள பேரழிவை உலகம் முழுக்க கொண்டு சென்றுள்ளார். கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் இதுவரை 368 பேர் உயிர் இழந்துள்ளதுடன் அதிகமானோரைக் காணவில்லை என்பதுடன் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்து, நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

வெள்ளப் பாதிப்பிலிருந்து மீள்வதற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும் நிலையில், உலகம் முழுவதும் இருந்து உதவிகள் கிடைக்கப்பெற்று வருகின்ற போதிலும் மேலதிக உதவிகள் தேவைப்படுகின்றன.இந்நிலையில், அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்திவரும் ஏ.ஆர்.ரகுமான், லொஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘முஸ்தபா… முஸ்தபா…’ என்ற பாடலைப் பாடிய அவர் அந்தப் பாடலை முடிக்கும்போது, ‘கேரளா… கேரளா… டோண்ட் வொரி கேரளா… காலம் நம் தோழன் கேரளா…’ என பாடியுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்ற நிலையில் இதன்மூலம் உலக அளவில் கேரளாவின் துயரம் கொண்டு செல்லப்பட்டு உதவிகள் பெருமளவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More