Home உலகம் அமெரிக்காவின் ஹொலிவுட் நடிகை வனேஸா மார்கியுஸ் தற்காப்புக்காக காவல்துறையினர் சுட்டதில் உயிரிழந்துள்ளார்.

அமெரிக்காவின் ஹொலிவுட் நடிகை வனேஸா மார்கியுஸ் தற்காப்புக்காக காவல்துறையினர் சுட்டதில் உயிரிழந்துள்ளார்.

by admin
 

அமெரிக்காவின் ஹொலிவுட் நடிகை வனேஸா மார்கியுஸ் (Vanessa Marquez)  துப்பாக்கியை வைத்து மிரட்டியதனையடுத்து தற்காப்புக்காக காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னி மாநிலத்தில் வசித்து வந்த நடிகை வனேஸா மார்க்கியு. இவர் அமெரிக்காவில் ஒளிபரப்பாகும் இஆர் எனும் தொடரில் நடித்துப் புகழ்பெற்றதுடன் தற்போது திரைப்படங்களிலும் நடித்து வந்தார்.

அண்மைக்காலமாக ஒருவிதமான மனநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் வெள்ளிக்கிழமை தனது வீட்டில் மிகுந்த ஆவேசமாகக் காணப்பட்டதனையடுத்து வீட்டின் உரிமையாளர் காவல்துறையினருக்கும் மருத்துவக்குழுவுக்கும் தகவல் வழங்கியிருந்தார்.

அவர்கள் அங்கு வந்த போதும் அவர்களை நெருங்கவிடாமல் கையில் துப்பாக்கி வைத்து மிரட்டிக் கொண்டிருந்தமையினால் வேறுவழியின்றி தற்காப்புக்காக காவல்துறையினர் மார்க்யூவை துப்பாக்கியால் சுட்டு அவரிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.  இதையடுத்து உடனடியாக மார்க்யூஸ்அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும் வழியில் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ஆனால், மார்க்யூஸ் கையில் இருந்தது பொம்பை துப்பாக்கி என பின்னர்தான காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More