Home இலங்கை வந்தாறுமூலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி நினைவேந்தல் :

வந்தாறுமூலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டி நினைவேந்தல் :

by admin

கிழக்குப் பல்லைக் கழகத்தில் 1990ஆம் ஆண்டு விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டிய போராட்ட நினைவேந்தல் இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. வந்தாறுமூலை பல்கலைக்கழக வளாக முன்றலில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் காணமால் ஆக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்து மௌன இறைவணக்கம், மற்றும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி என்பன இடம்பெற்றது.

1990 ஆண்டு இதேபோல் ஒரு காலப் பகுதியில் போர் உக்கிரமடைந்த நிலையில் உயிரை பாதுகாக்க கிழக்குப் பல்கலைக்கழக முகாமில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் தஞ்சமடைந்திருந்தனர். இதன்போது விசாரணைக்கென இலங்கை இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டவர்கள் தொடர்பில் 28 ஆண்டுகள் கடந்தும் எந்த உண்மைகளும் வெளிப்படுத்தப்படவில்லை.

கிழக்குப் பல்கலைக்கழக கலை காலாசார பீட மாணவர் ஒன்றியம் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அமைப்பு இணைந்து ஏற்பாடு செய்த நினைவேந்தலில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு, வந்தாறுமூலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதியை வலியுறுத்திக் குரல் கொடுத்தனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More