Home இலங்கை தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தன்று வேறு நிகழ்வுகளுக்கு தடை :

தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தன்று வேறு நிகழ்வுகளுக்கு தடை :

by admin

இந்திய அரசுக்கு எதிராக உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்த, தியாகி திலீபனின் நினைவேந்தல் நாட்களில் யாழ்ப்பாணம் மாநகர சபை நியாயாதிக்க எல்லைக்கு உட்பட்ட பகுதியில், வேறெந்த நிகழ்வையும் நடத்துவதற்கு அனுமதிக்கக் கூடாது என யாழ்ப்பாணம் மாநகர சபை தீர்மானித்துள்ளது.

நல்லூரில் உள்ள தியாகி திலீபன் நினைவிடத்தில் எதிர்வரும் 26ஆம் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்துவது தொடர்பில் இன்று நடைபெற்ற யாழ் மாநகர சபை உறுப்பினர்களுக்கான ஏற்பாட்டுக் கூட்டத்திலேயே இவ் விடயம் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தியாக தீபம் திலீபன் நினைவேந்தலை ஒழுங்குபடுத்தும் அதேவேளை, மாநகர சபை எல்லையினுள் நிகழ்வொன்றை நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் உறுப்பினர் ஒருவர் இன்றைய கூட்டத்தில் வேண்டுகோள்விடுத்தார்.

இதனையடுத்து, எதிர்வரும் 26ஆம் திகதி நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ள தேசிய சுற்றுலா தின நிகழ்வுக்காக யாழ். மாநகர சபை மைதானத்தை வழங்குவதில்லை என கலந்துகொண்ட உறுப்பினர்கள் ஏக மனதாகத் தீர்மானித்தனர். அத்துடன் உறுப்பினர்களின் தீர்மானம் பற்றி வட மாகாண சுற்றுலாத் துறை செயலணியின் தலைவருக்கு எழுத்து மூலம் அறிவிப்பதெனவும் அங்கு முடிவு செய்யப்பட்டது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More