Home சினிமா நல்ல பயிற்சியின் பின்னரே நடிகர்கள் பாட வேண்டும்

நல்ல பயிற்சியின் பின்னரே நடிகர்கள் பாட வேண்டும்

by admin

நல்ல பயிற்சி எடுத்த பின்னரே நடிகர்கள்  பாட வேண்டும் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கூறியுள்ளார். ‘தி வொய்ஸ்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமான் நடுவராக பங்கேற்கவுள்ளார்.
இளம் பாடகர்களுக்கான குரல் திறன்போட்டியாக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி ஒரு சர்வதேச நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சி குறித்து கூறும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும்
திரைப்படங்களில் தங்களுக்கான பாடல்களை நடிகர்களே பாடுவது உலகம் முழுக்கவே பொதுவாக நடைமுறையில் இருக்கும் ஒன்றுதான். நடிகர்கள் தங்கள் நடிப்பில் வெளியாகும் படத்திற்காக பாடும் பாடலைப் பதிவு செய்யும் முன் அவர்களுக்கு முறையான பயிற்சி அவசியம். அதற்காக அவர்கள் போதுமான நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும். இன்றைய நாட்களில் நடிகர்கள் மிகவும் பரபரப்பாக பிசியாக இருக்கிறார்கள்.

ஒப்பந்தமான பொறுப்புகளையே ஏமாற்றி தப்பிக்கும் நிலையில் இருக்கிறார்கள். அதையெல்லாம் விட்டுவிட்டு தங்கள் பாடல்களைப் பாடுவதற்கு பயிற்சியெடுக்க நேரம் இல்லாத ஒரு இக்கட்டான சூழல்தான் அவர்களுக்கு உள்ளது. ஒருவேளை பயிற்சிக்குத் தேவையான நேரத்தை ஒதுக்க முடியும் என்று அதில் ஈடுபட்டால் அவர்களது படத்தில் அவர்களே பாடுவது என்பது மிகமிக அற்புதமான ஒரு யோசனையாக இருக்கும்‘’. இவ்வாறு ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்தார்.

 
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More