Home உலகம் அமெரிக்க வங்கியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி

அமெரிக்க வங்கியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி

by admin

அமெரிக்காவில் வங்கி ஒன்றில் இனந்தெரியாத நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோக தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.  தெற்கு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள செப்ரிங் பகுதியில், இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தாக்குதல் நடத்திய நபர் 21 வயதுடைய செப்ரிங் பகுதியை சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டள்ளது. மேலும் இந்த துப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் இன்னும் தெரியாத நிலையில், இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையங்களின் அறிக்கையின் படி, அமெரிக்காவில் 2017-ம் ஆண்டில் சுமார் 40,000 பொதுமக்கள் இதுபோன்ற திடீர் தாக்குதல்களால் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More