Home இலங்கை கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடாதிருக்க நடவடிக்கை

கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடாதிருக்க நடவடிக்கை

by admin


பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை தொடர்பான விசேட கூட்டம் ஒன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இன்று இடம்பெற்றுள்ளது.

இந்தமக் கூட்டத்தின் போது பெருந்து தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சனை குறித்து எதிர்வரும் 5ஆம் திகதி பெருந்தோட்ட கைத்தொழில் துறை அமைச்சர் நவீன் திசாநாயக்க மற்றும் தோட்ட கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக பிரதமர் தெரிவித்ததாக அமைச்சர் ராதாகிருஷ்ணன் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது தெரிவித்துள்ளார்.

அதுவரை அண்மையில் செய்துகொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடாதிருக்க நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்

இன்று நடைபெற்ற இந்த சந்திப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதிநிதிகளான அமைச்சர் மனோ கணேசன், அமைச்சர் திகாம்பரம், அமைச்சர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More