Home இலங்கை தெல்லிப்பளையில் குடும்ப பெண்ணை தாக்கிவிட்டு கொள்ளை

தெல்லிப்பளையில் குடும்ப பெண்ணை தாக்கிவிட்டு கொள்ளை

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


யாழ். தெல்லிப்பளை பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த குடும்ப பெண் மீது தாக்குதலை மேற்கொண்டு 17 பவுண் நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளது.

தெல்லிப்பளை கட்டுவன் புலம் வீதியில் உள்ள வீடோன்றிலையே நேற்று சனிக்கிழமை அதிகாலை இக் கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டின் ஜன்னல் கம்பிகளை வளைத்து அதனூடாக அதிகாலை வேளை உட்புகுந்த மூன்று கொள்ளையர்கள் , வீட்டில் நித்திரையில் இருந்தவர்களை எழுப்பி கத்திமுனையில் வைத்திருந்து வீட்டினை சல்லடை போட்டு தேடினார்கள்.

அதன் போது வீட்டில் இருந்த 20 ஆயிரம் ரூபாய் பணத்தினை எடுத்துக்கொண்டனர். பின்னர் குடும்ப பெண்ணின் தாலியினை பறிக்க முற்பட்ட போது அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவிக்க அவரின் தலையில் பலமாக கொள்ளையர்கள் தாக்கி தாலி உட்பட 17 பவுண் நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றனர்.

அதனை அடுத்து காயமடைந்த தனது மனைவியை, கணவன் மீட்டு தெல்லிப்பளை ஆதர வைத்திய சாலையில் அனுமதித்துள்ளதுடன் தெல்லிப்பளை காவநிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்ததுள்ளார் .அதனை அடுத்து காவல்துஐறயினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More