Home இலங்கை இலங்கை வரலாற்றில் பாரியளவு ஹெரோயினுடன் இருவர் கைது

இலங்கை வரலாற்றில் பாரியளவு ஹெரோயினுடன் இருவர் கைது

by admin


கொள்ளுபிட்டிப் பகுதியில் வாகன தரிப்பிடம் ஒன்றில் இருந்து இலங்கை பாரியளவு ஹெரோயினுடன் இருவரை கைது செய்துள்ள காவல்துறையினர் இலங்கையின் வரலாற்றில் கைப்பற்றப்பட்ட பாரியளவான ஹெரோயின் போதைப் பொருள் இதுவென குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து 2945 மில்லியன் ரூபா பெறுமதியான 294 கிலோ 490 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவ்வாறு ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டள்ளதுடன் சந்தேக நபர்களும்; கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இதன்போது இரு வான்களையும் கைப்பற்றிறுள்ளதாகவும் கைது செய்யப்பட்டவர்கள் பாணந்துறை மற்றும் வாழைத்தோட்டம் பகுதிகளை சேர்ந்த 32 மற்றும் 43 வயதுடையவர்கள் எனவும் காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More