Home இலங்கை டிப்ளோமா பட்டதாரிகளுக்கு விண்ணப்பம் கோர மத்திய அரசு அனுமதி

டிப்ளோமா பட்டதாரிகளுக்கு விண்ணப்பம் கோர மத்திய அரசு அனுமதி

by admin


வடமாகாணத்தின் அசமந்த போக்கின் காரணமாக தடைப்பட்டிருந்த டிப்ளோமா பட்டதாரிகளுக்கான நியமனங்களுக்கு, விண்ணப்பங்களை கோர வட மாகாணத்திற்கு, மத்திய அரசினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றியத்தின் தலைவரும் முன்னாள் விவசாய பிரதி அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண உடற்கல்வி ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனங்களுக்கான விண்ணப்பங்களும், பகுதி நேர ஆங்கில ஆசிரியர்களும் இவ் நடைமுறையின் மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதே வேளை மீன்பிடிதுறைக்கான டிப்ளோமா பயின்ற கற்கை நெறியாளர்களும் இதன் மூலம் உள்வாங்கப்பட உள்ளதாகவும் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More