Home இலங்கை அட்டனில் தொடர் லயக்குடியிருப்பில் தீவிபத்து :

அட்டனில் தொடர் லயக்குடியிருப்பில் தீவிபத்து :

by admin

அட்டன் காவல்துறைப் பிரிவிற்குட்டபட்ட டிக்கோயா கீழ்பிரிவு பிரிவு தோட்ட குடியிருப்பில் நேற்று (05.03.2019 ) இரவு 11.45 மணியளவில் 24 வீடுகள் கொண்ட தொடர் லயக்குடியிருப்பில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஒரு வீடு முற்றாகவும், மற்றைய வீடு பகுதியளவிலும் எரிந்துள்ளன.

தீ ஏற்பட்ட போது வீட்டில் இருந்தவர்கள் கூச்சலிட்டதையடுத்து, அயலவர்கள் வந்து ஏனைய வீடுகளுக்கு தீ பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். முற்றாக எரிந்த வீட்டில் பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், உடுதுணிகள் என பெருமளவிலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இது தொடர்பாக அட்டன் காவல் நிலையத்திற்கும், தோட்ட நிர்வாகத்திற்கும் பிரதேசவாசிகளால் தகவல் வழங்கப்பட்டதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் தீ பரவலுக்கான காரணங்களை கண்டறிய மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருவதோடு, தோட்ட நிர்வாகம் இவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றது.
(க.கிஷாந்தன்)

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More