Home இலங்கை 3 000 தாதியருக்கு அமெரிக்காவில் வேலைவாய்ப்பு

3 000 தாதியருக்கு அமெரிக்காவில் வேலைவாய்ப்பு

by admin

 
3 000 தாதியருக்கு அமெரிக்காவில் வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது. American company –  Michigan-based Karma Services என்னும் நிறுவனத்துடன் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அண்மையில் கைச்சாத்திட்ட உடன்படிக்கைக்கு அமைவாக இந்த வேலைவாய்ப்பு வழங்கப்பட்வுள்ளது.

இதற்கமைய இலங்கை தாதியர்களுக்கு மாதாந்த சம்பளமாக 5 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் அமெரிக்காவிலுள்ள வைத்தியசாலையில் பணியாற்றுவதற்காக முதல் தடவையாக தாதி ஒருவர் இலங்கையில் இருந்து பயணமாகியுள்ளார்.

இலங்கை தாதியர் சங்கத்தில் பதிவு செய்துள்ள கண்டி பொது வைத்தியசாலையின் பணிபுரியும் றுவனி ரணசிங்ஹ என்பவரே நேற்று முன்தினம் இவ்வாறு அமெரிக்கா சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இது தவிர மேலும் 25 தாதியர்கள் அமெரிக்கா செல்வதற்கான பயிற்சிகளில் தற்சமயம் ஈடுபட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More