Home இலங்கை குடும்ப தகராறு காரணமாக குடும்பஸ்தர் மீது கோடரி வெட்டு

குடும்ப தகராறு காரணமாக குடும்பஸ்தர் மீது கோடரி வெட்டு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


குடும்ப தகராறு கைக்கலப்பாக மாறி கோடரி வெட்டுக்கு இலக்காகிய குடும்பஸ்தர் ஒருவர் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மந்துவில் கிழக்கை சேர்ந்த 60 வயதாக ந.கோபாலன் என்பவரே படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

நீண்ட காலமாக நிலவி வந்த குடும்ப தகராறு நேற்றைய தினம் இரவு 09 மணியளவில் இரு குடும்பஸ்தர்களுக்கு இடையிலும் கை கலப்பாக மாறிய போதே குறித்த குடும்பஸ்தர் கோடாரியால் தாக்கப்பட்டுள்ளார். அத்துடன் தாக்குதலினை மேற்கொண்ட குடும்பஸ்தர் தலைமறைவாகியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி காவல்துறையினர் விசாரணைகளை முன்னேடுத்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More