Home இலங்கை குப்பைகளினால் மின்சார உற்பத்தியை முன்னெடுப்பது குறித்து கொரிய தூதுக்குழு ஆராய்வு

குப்பைகளினால் மின்சார உற்பத்தியை முன்னெடுப்பது குறித்து கொரிய தூதுக்குழு ஆராய்வு

by admin


குப்பைகளினால் மின்சார உற்பத்தியை முன்னெடுப்பது குறித்து கொரிய தூதுக்குழு அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பள்ளக்காட்டுப் பிரதேசத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளது.

இன்று (26) முற்பகல் கொரிய தூதுக்குழு அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல். அமானுல்லாவை அவரது அலுவலகத்தில் வைத்து சந்தித்ததுடன் பிராந்தியத்தில் அன்றாடம் சேகரிக்கப்படும் திண்மக்கழிவுகளைக் கொண்டு மின்சார உற்பத்தித் திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பாக கலந்துரையாடியது.

இதன் போது கொரிய நாட்டின் முன்னணி பொறியியல் தொழில்நுட்ப நிறுவனமொன்றின் தூதுக்குழுவினருடன் நல்லாட்சிக்கான புத்தாக்க நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆலோசகர் எம்.ஐ.எம்.வலீத் உட்பட அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் ஏ.எல். பாயிஸ் உட்பட குறித்த பகுதிக்கு சென்று பார்வையிட்டனர்.

இதன்போது சபையின் திண்மக்கழிவகற்றல் முகாமுத்துவத்தை மேம்படுத்துவதற்கான பொறிமுறைத் திட்டங்கள் குறித்தும் ஆராயபட்டது.
பாறுக் ஷிஹான்

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More