Home இலங்கை ஹெரோயின் வைத்திருந்தவர்களுக்கு புனர்வாழ்வு

ஹெரோயின் வைத்திருந்தவர்களுக்கு புனர்வாழ்வு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


ஹெரோயின் போதை பொருள் வைத்திருந்தனர் என்ற குற்றச் சாட்டில் கைது செய்யபட்டவர்கள் குற்றத்தை ஒத்துக் கொண்டதை அடுத்து அவர்களை பொலன்னறுவை மறுவாழ்வு மையத்தில் சீர்திருத்தத்துக்காக சேர்க்குமாறு நேற்றைய தினம் புதன்கிழமை மல்லாகம் நீதி மன்றம் உத்தரவிட்டது.

காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதை பொருள் வைத்திருந்தனர் என்ற குற்றச் சாட்டில் சிறப்பு குற்ற தடுப்பு காவல்துறையினரால் இருவர் கைது செய்யப்பட்டிருந்தநிலையில் அவர்கள் தெல்லிப்பழை காவல்நிலயத்தில் பாரப்படுத்தப்பட்டு மறுநாள் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

நீதிமன்றில் சந்தேக நபர்கள் குற்றத்தை ஒத்துக்கொண்டதை அடுத்து அவர்கள் இருவரையும் பொலன்னறுவை கந்தைக்காடு மறுவாழ்வு நிலையத்தில் ஒருவருடம் சீர்திருத்தத்துக்காக அனுப்பி வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More