Home இலங்கை சங்­கி­லியை அப­க­ரித்த நபரை காவல்துறையினரிடம் பிடித்­துக் கொடுத்­த மூதாட்டி

சங்­கி­லியை அப­க­ரித்த நபரை காவல்துறையினரிடம் பிடித்­துக் கொடுத்­த மூதாட்டி

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


கடந்த வாரம் ஏமாற்­றித் தன்­னி­டம் தங்­கச் சங்­கி­லியை அப­க­ரித்த நபரை நேற்­று காவல்துறையினரிடம் பிடித்­துக் கொடுத்­த மூதாட்டி, அம்மனின் கிருபையால் தான் திருடனை பிடிக்க முடிந்தது என கூறினார். கடந்த பங்­கு­னித் திங்­கள் பொங்­கல் உற்­ச­வத்­துக்­காக அச்­சு­வே­லி­யி­லி­ருந்து மட்­டு­வில் பன்­றித்­த­லைச்சி கண்­ணகை அம்­பாள் கோவி­லுக்­கு மூதாட்டி ஒருவர் தனது மகனுடன் சென்றுள்ளார்.

அங்கு ஆலய வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருண்ந்த வேளை அவரை உட­ன­டி­யாக அறி­வித்­தல் பந்­த­லுக்கு வரு­மாறு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. அவர் அங்கு சென்­ற­போது, அங்கு நின்ற ஒரு­வர் உங்களின் மகன் விபத்­தில் சிக்கி காய­ம­டைந்து சாவ­கச்­சேரி மருத்­து­வ­ம­னைக்குகொண்டு செல்­லப்­பட்­டுள்­ளார். மருத்­து­வச் செல­வுக்கு பணம் தர வேண்­டும் என்று அங்கு நின்றவர் கேட்­டுள்­ளார்.

மகன் விபத்­தில் சிக்­கி­னார் என்ற பதற்­றத்­தில் பணம் இல்­லை­யெ­னக் கூறி கழுத்­தில் அணிந்­தி­ருந்த 3 பவுண் தங்­கச் சங்­கி­லியை கழற்­றிக் கொடுத்­துள்­ளார். சங்­கி­லியை வாங்­கி­ய­வர் அவ­ச­ர­மாக அங்­கி­ருந்து சென்­றுள்­ளார்.

அதன் பின்னர் சிறி­து­நே­ரத்­தில் அங்கு மகன் வந்தார். மகனை கண்டதும் தாம் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பதனை அறிந்து கொண்டார்.

இந்நிலையில் பங்­கு­னித் திங்­கள் நான்­காம் திங்­க­ளான நேற்று மூதாட்­டி­யும் மக­னும் கோவி­லுக்கு வந்து வழி­பட்­டுக் கொண்­டி­ருந்த வேளை­யில் சங்­கி­லியை வாங்­கிய நபர் அங்கு நின்­றுள்­ள நிலையில் அவரை அடை­யா­ளம் கண்டு கொண்ட மூதாட்டி மக­னி­டம் கூறி­யுள்­ளார்.

மகன் அந்த நப­ரைப் பிடித்து அங்­குள்ள காவல்துறையினரிடம் ஒப்­ப­டைத்­துள்­ளார். காவல்துறையினரின் விசா­ர­ணை­யில் மூதாட்­டி­யி­டம் சங்­கி­லியை வாங்­கி­யதை அந்த நபர் ஒப்­புக் கொண்­டார் என்­றும், அதை­ய­டுத்­து அந்த நப­ரைக் காவல்நிலை­யம் கொண்டு சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

அதேவேளை கடந்த திங்கட்கிழமை தன்னை ஏமாற்றி தன்னுடைய 3 பவுண் சங்கிலியை அபகரித்து சென்றதையடுத்து , அம்மனிடம் மனம் உருகி மன்றாடி வேண்டினேன். இந்த கிழமை அம்மன் எனக்கு அந்த திருடனை பிடித்து தந்துள்ளார். அதற்கு அம்மனின் கிருபையே காரணம் என மூதாட்டி அங்கிருந்தவர்களிடம் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More