Home இலங்கை ஐ.நா. செயலாளரின் பிரதிநிதிகளில் ஒருவராக எம்.ஏ.சுமந்திரன் நியமனம்….

ஐ.நா. செயலாளரின் பிரதிநிதிகளில் ஒருவராக எம்.ஏ.சுமந்திரன் நியமனம்….

by admin

ஐ.நா. செயலாளரின் பிரதிநிதிகளில் ஒருவராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 14 மற்றும் 15ஆம் திகதிகளில் நேபாளத்தில் இடம்பெற்ற ஐ.நா. பொதுச் செயலாளரின் விசேட பிரதிநிதிகளாக பணியாற்றக்கூடிய முக்கிய பிரமுகர்களுக்கான இரண்டு நாள் கருத்தாடல் அமர்வில் எம்.ஏ.சுமந்திரனும் பங்கேற்றிருந்தார்.

தென்னாசிய பிராந்தியத்தில் திடீரெனப் பிணக்குகள் உருவாகுகின்றபோது, ஐ.நா. செயலாளர் நாயகத்தின் விசேட பிரதிநிதிகளாக அவற்றைக் கையாளும் தகுதியுடையோரை ஐ.நா. செயலாளர் நாயகம் தேர்ந்தெடுத்துள்ளார். பத்து நாடுகளில் இருந்து சுமார் 25 பிரமுகர்களை ஐ.நா. செயலாளர் நாயகம் தமது பிரதிநிதி அந்தஸ்துடன் தெரிவு செய்துள்ள நிலையில் அவர்களுக்கான கருத்தாடல் அமர்வே தற்போது நேபாளத்தில் இடம்பெற்று வருகின்றது.

இலங்கையிலிருந்து எம்.ஏ.சுமந்திரனும், முன்னாள் வெளிவிவகாரச் செயலாளர் பிரசாத் காரியவசமும் ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் தேவைப்படும் அவசர வேளையில் தமது பிரதிநிதியாகச் செயற்படுவதற்குரிய பிரமுகர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மனித உரிமைகள் செயற்பாட்டாளரான ராதிகா குமாரசுவாமியும் இந்தக் கருத்தாடல் அமர்வில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More