Home இலங்கை யாழ் மேல் நீதிமன்ற நீதிபதியின் வாசஸ்தல மதிலை உடைத்துக் கொண்டு வாகனம் உட்புகுந்து விபத்து

யாழ் மேல் நீதிமன்ற நீதிபதியின் வாசஸ்தல மதிலை உடைத்துக் கொண்டு வாகனம் உட்புகுந்து விபத்து

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்


யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தின் மதிலை உடைத்துக் கொண்டு வாகனம் ஒன்று உட்புகுந்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் இது சாதாரண விபத்து என தெரியவந்ததை அடுத்து பதற்ற நிலை தணிந்துள்ளது.

நீதிபதி கடமைக்கு செல்லும் நேரத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ். கச்சேரி – நல்லூர் வீதியில் அமைந்துள்ள நீதிபதியின் இல்லத்துக்கு முன்பாக இன்று காலை 7.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது.

வேகமாக வந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து நீதிபதியின் இல்ல வாயில் கதவுடன் மோதியது. இதில் நீதிபதியின் இல்ல வாயில், அருகிலுள்ள வீட்டு மதில் ஆகியவை இதனால் உடைந்து சேதமாகியுள்ளதுடன் அப்பகுதியில் உள்ள மின்கம்பம் ஒன்றும் முறிந்தது.

சம்பவத்தை அடுத்து அந்தப் பகுதிக்கு விரைந்த காவல்துறையினர் வாகனத்தை தீவிர சோதனை செய்ததுடன் வாகன சாரதியையும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகள் தொடார்ந்து இடம்பெற்று வருகின்றன.

 

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More